திருத்துறைப்பூண்டி, மே 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீசர் கோவிலில் (பெரிய கோயில்) சனி பிரதோஷத்தை முன்னிட்டு பிறவி மருந்தீசர் நந்தீஸ்வரருக்கும் 11 விதமான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரதோஷ நாயனார் நந்தீஸ்வரர் சிறப்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் 1000க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். உலக மேன்மைக்காவும் ஊர் மேன்மைக்காகவும் பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். சர்வாலய உழவாரப்பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.
