திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

 

காரைக்குடி: காரைக்குடி அருகே சூரக்குடி பைபாஸ் சாலையில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வர்த்தக அணி அமைப்பாளர் சொக்கலிங்கம்புதூர் எஸ்.கந்தசாமி ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் துவக்க விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி ஆகியோர் தலைமை வகித்து திறந்து வைத்தனர்.

சூரக்குடி ஊராட்சி தலைவர் டாக்டர் முருகப்பன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மணிமேகலை, அவைத்தலைவர் சூரக்குடிபழனியப்பன், பள்ளத்தூர் பேரூராட்சி செயலாளர் அசோக், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் அழகு, பள்ளத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் மஜீத், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் மணச்சைபாண்டி, கிளை செயலாளர் சோலையன், சூரக்குடி சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேட்டி வழங்கப்பட்டது.

The post திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: