தாராபுரத்தில் 12ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தாராபுரம்,ஏப்11:தாராபுரம் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்லடம் மின் பகிர்மான வட்டம் தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 12ம் தேதி பகல் 11 மணியளவில் தாராபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.அது சமயம் மின் நுகர்தல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவும் இருப்பின் பொதுமக்கள் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு பிரச்னைகளுக்கு தீர்வு பெறலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post தாராபுரத்தில் 12ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: