தமிழக பக்தர்கள் ஒரே நாளில் ரூ10 கோடி நன்கொடை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு அறக்கட்டளைகள் செயல்படுத்தி வருகிறது. இதில் ஒரே நாளில் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக ரூ10 கோடியை பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர். இதில்  திருநெல்வேலியைச் சேர்ந்த பக்தர்கள் மட்டும் ரூ7 கோடியை தலா ரூ1 கோடி என ஸ்ரீவெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை,ஸ்ரீவெங்கடேஸ்வரா பசு பாதுகாப்பு அறக்கட்டளை, பாலாஜி மாற்றுத்திறனாளிகளுக்கான அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு நிறுவனம் (பர்டு), ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பாதுகாப்பு அறக்கட்டளை,ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்ன பிரசாத அறக்கட்டளை, ஸ்ரீவெங்கடேஸ்வரா சர்வ ஸ்ரேயஸ் அறக்கட்டளை,  வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சிக்கு  நன்கொடையாக வழங்கினர். மேலும் வெங்கடேஸ்வரா வித்யாதான அறக்கட்டளைக்கு ரூ1 கோடியும், ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆலய நிர்மானம் அறக்கட்டளைக்கு ரூ1 கோடியும், வெங்கடேஸ்வரா பாரம்பரிய கோயில் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு ரூ1 கோடியும் திருநெல்வேலியை சேர்ந்த சில தனியார் நிறுவனங்கள் வழங்கி உள்ளன. …

The post தமிழக பக்தர்கள் ஒரே நாளில் ரூ10 கோடி நன்கொடை appeared first on Dinakaran.

Related Stories: