சென்னை தமிழக அரசு இலவசம் என்று அறிவித்த பிறகு 78 லட்சம் பெண்கள் பஸ்சில் பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் Jul 16, 2021 தமிழ்நாடு அரசு அமைச்சர் ராஜகாந்தப்பன் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ராஜகாந்தப்பன் சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 12ம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதில் 5,741 திருநங்கைகள், 51,615 மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள் 8,396 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், 12ம் தேதி முதல் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச பயண சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பேருந்து இயக்கப்படாமல் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி பகுதியில் முதலமைச்சர் உத்தரவின் படி நேற்று முதல் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துத்துறை மக்களுக்காக மட்டுமே, லாபத்திற்காக அல்ல. டீசல் விலை தினசரி அதிகரித்து வருகிறது. டீசல் விலை அதிகரிப்பதால் பேருந்து டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. கடந்த 2 தினங்களில் புதுச்சேரிக்கு 364 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டம் மூலம் சென்னையில் 2,500 பேருந்துகளில் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, ₹70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ₹41 கோடி பெறப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி வாகனங்களை FC (தரச்சான்றிதழ்) செய்து பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன வரிக்கட்டுவதில் கால நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பஸ்சில் செல்வதில் நெல்லை பெண்கள் ‘டாப்’ அமைச்சர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் மொத்த பயணம் செய்பவர்களில் 56% பெண்கள் எனவும், நாள் ஒன்றிற்கு 28 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். பேருந்துகளில் அதிகளவில் பெண்களே பயணம் செய்கிறார்கள். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 68% பெண்கள் தினசரி பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்ற திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் நாட்களில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார். … The post தமிழக அரசு இலவசம் என்று அறிவித்த பிறகு 78 லட்சம் பெண்கள் பஸ்சில் பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் appeared first on Dinakaran.
அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே
மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு.. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அலாரம் பொருத்தும் பணி தீவிரம்
அண்ணாநகர் கோட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி கிரைய பத்திரங்களை பெறலாம்: கலெக்டர் வேண்டுகோள்
மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல்
மழைக்காலத்தில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணி செய்ய வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்: திருவிக நகர் மண்டல குழு கூட்டத்தில் அறிவிப்பு
தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு