தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி தொடக்க நாள் விழா மருத்துவமனையில் அன்னதானம் வழங்கல்

 

தஞ்சாவூர், ஏப்.29: தஞ்சாவூரில் இந்திய ஜனநாயக கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் தஞ்சை அரசு ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்விற்கு மாநில போராட்ட குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தார். விழாவில், காவிரி டெல்டா மண்டலத்தை அழிவு திட்டங்களில் இருந்து பாதுகாப்போம். விவசாயிகளின் உரிமை மற்றும் மக்களின் உரிமைகளுக்காக போராடுவோம். அனைத்து இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம். பெண்களுக்கு சம உரிமை, சம வேலை வாய்ப்புகளுக்கு துணை நிற்போம் என உறுதி ஏற்கப்பட்டது.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி தொடக்க நாள் விழா மருத்துவமனையில் அன்னதானம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: