தஞ்சாவூரில் 2 கார்கள் மோதல் திமுக நிர்வாகிகள் 2 பேர் பரிதாப சாவு

வல்லம்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு நேற்று மதியம் ஒரு காரில் மன்னார்குடி ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், கூட்டுறவு சங்கத்தலைவர் வைத்தியநாதன், செல்லபாண்டியன் ஆகிய 3 பேர் சென்றனர். காரை மன்னார்குடி மேலவாசல் சோழன் நகரை சேர்ந்த கௌதமன் (36) ஓட்டி வந்தார். இதேபோல் தஞ்சாவூரிலிருந்து ஊரணிபுரத்திற்கு மற்றொரு காரில்குறிஞ்சி நகரை சேர்ந்த திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் சேட் முகமது (60), திமுக நகர செயலாளர் சஞ்சய் காந்தி (45), சுந்தர் (45), ரமேஷ் (40), ராஜா (42) ஆகிய 5 பேர் சென்று கொண்டிருந்தனர்.தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் அருகே 2 கார்களும் திடீரென நேருக்குநேர் மோதியது. இதில் கார் இடிபாடுகளுக்குள் சிக்கி சேட்முகமது, சஞ்சய் காந்தி ஆகிய 2 பேரும் இறந்தனர். கார் டிரைவர் உள்பட 2 பேரும், மற்றொரு காரில் வந்த கவுன்சிலர் மணிகண்டன், கூட்டுறவு சங்கத்தலைவர் வைத்தியநாதன் உள்பட 5 பேரும் படுகாயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

The post தஞ்சாவூரில் 2 கார்கள் மோதல் திமுக நிர்வாகிகள் 2 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Related Stories: