டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி, ஆயில் திருடிய மர்ம கும்பல்

தர்மபுரி, அக். 21: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் நடுகுட்டலஅள்ளி பகுதியில், விவசாயிகளின் மின்சார பயன்பாட்டிற்காக, மின்வாரியம் மூலம் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, இந்த டிரான்ஸ்பார்மில் இருந்த ₹2 லட்சம் மதிப்பிலான 60 கிலோ காப்பர் கம்பி, 90 லிட்டர் ஆயிலை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் திவாகரன், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர், இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி, ஆயில் திருடிய மர்ம கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: