ஜல்லிக்கட்டு இளைஞர்களின் போராட்டத்தை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினீர்கள் என்பது உங்கள் பதில் உரையிலேயே தெரியும்: ஓபிஎஸ்க்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான இ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:சட்டமன்றத்தில் 27.1.2017 அன்று பதிலுரை அளித்த ஓ.பன்னீர்செல்வம், “ஜல்லிக்கட்டு போராட்டத்தினர் குடியரசு நாள் விழாவை சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது” “தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும்’’ என்றும், “இந்திய குடியரசுத் தினத்தை நிராகரிக்கிறோம் என்ற பதாகைகள் வைத்திருந்தார்கள்” என்றெல்லாம் சட்டமன்றத்தில் உரையாற்றியது ஓ.பன்னீர்செல்வம் தான். “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட தீய சக்திகளை கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டமன்றத்தில் உரையாற்றி-அதற்காக ஒரு விசாரணை ஆணையத்தை – ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜசேகரன் தலைமையில் அமைத்தது இதே ஓ.பன்னீர்செல்வம்தான்.  சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மீது எவ்வளவு அவதூறுகளை வீச முடியுமோ, எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியுமோ அத்தனையையும் செய்து விட்டு இன்று ஒன்றும் தெரியாதது போல் அறிக்கை விடுவதும்- உண்மையைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய எங்கள் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை கண்டனம் செய்வது தான் அரசியல் நாகரிகமா?எங்கள் தலைவர் மிகத் தெளிவாக-அடுத்த முறை சட்டமன்றத்திற்கு வரும் போது ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்திப் பேசியதை படித்துப் பாருங்கள் என்று தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொல்லியிருந்தார். அதைக்கூட புரிந்து கொள்ளாமல்- மதுரையில் தன் வேடத்தை கலைத்து விட்டாரே- இளைஞர்களின் சாதனையை தன் சாதனை போல் இத்தனை காலமும் பேசி வந்ததை அம்பலப்படுத்தி விட்டாரே என்ற கோபத்தில்-எரிச்சலில் எங்களின் முதல்வர் மீது பாய்ந்து கண்டன அறிக்கை வெளியிடுவதில் அர்த்தமில்லை.ஆகவே, ஓ.பன்னீர்செல்வம்- அன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பயந்து- அவர்கள் சொன்னதைக் கேட்டு- ஜல்லிக்கட்டு இளைஞர்களின் போராட்டத்தை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினீர்கள்- களங்கப்படுத்தினீர்கள் என்பதை எங்கள் தலைவர் சொன்னதுபோல் ஆற அமர்ந்து ஒருமுறை உங்களது சட்டமன்ற பதிலுரையை படித்துப் பாருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ஜல்லிக்கட்டு இளைஞர்களின் போராட்டத்தை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தினீர்கள் என்பது உங்கள் பதில் உரையிலேயே தெரியும்: ஓபிஎஸ்க்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: