சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: பட்ெஜட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது.தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று வேளாண்மை துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது பட்ெஜட், வேளாண்மை துறை பட்ெஜட் மீதான விவாதம் நடைபெறுகிறது. 24ம் தேதி பொது மற்றும் வேளாண்மை துறை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்குகின்றனர். இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் இ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா மற்றும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் அனைத்து திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 45 நிமிடம் நடந்தது. கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும். மேலும் மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை சட்டப்பேரவையில் எவ்வாறு பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும். முதல் முறையாக எம்எல்ஏக்களாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அப்போது மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்….

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: பட்ெஜட் கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: