செங்கல்பட்டில் பரபரப்பு மனநிலை பாதித்த சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு ஆயுள்தண்டனை

செங்கல்பட்டு: மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு நிதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா போந்தூரை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி என்கிற ராஜமாணிக்கம் (62). இவர், விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு குழந்தை இல்லாததால், இவரும் இவரது மனைவியும் தனியாக வசித்து வந்துள்ளனர். அப்பகுதியில், மனநிலை  பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ராஜமாணிக்கம் வீட்டிற்கு  அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 2015ம் ஆண்டு ராஜமாணிக்கம் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்ததாக, சித்தாமூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், ராஜ மாணிக்கத்தை கைது செய்த போலீசார் அவரை மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். வழக்கினை விசாரித்து நீதிபதி முதியவர் ராஜமாணிக்கம் மீது சுமத்தப்பட்ட குற்றம் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து, ராஜமாணிக்கம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். …

The post செங்கல்பட்டில் பரபரப்பு மனநிலை பாதித்த சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு ஆயுள்தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: