சுதந்திர தினவிழாவையொட்டி பழநி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

பழநி, ஆக. 13: சுதந்திர தினத்தையொட்டி பழநி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் வரும் 15ம் தேதி 76வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய நகரங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பழநி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய எஸ்.ஐ பொன்னுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். மெட்டர் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடமைகள் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன. தொடர்ந்து தண்டவாளம், ரயில் பெட்டிகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ரயில்நிலைய ஆட்டோ நிறுத்துமிடம், நடைமேடை, பயணிகள் தங்கும் பகுதி, பார்சல் அனுப்பும் பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

The post சுதந்திர தினவிழாவையொட்டி பழநி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Related Stories: