சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

மண்டபம்,மே 5: உச்சிப்புளி அருகே புது மடத்தில் இருந்து திருப்புல்லாணிக்கு தமிழக நெடுஞ்சாலை செல்லுகிறது. இந்த நெடுஞ்சாலையில் இருந்து காரான் கிராமத்திற்கு உட்பிரிவு சாலையாக தார்ச்சாலை செல்கிறது. இந்த தார்ச்சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்லும்போது டயர்களை பதம் பார்த்து விடுகிறது.மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது தடுமாற்றம் ஏற்பட்டு கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. சேதம் அடைந்த தார்ச்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: