சாத்தனூர் அணைக்கு 950 மில்லியன் கனஅடி நீர்வரத்து தொடர் மழை காரணமாக படம் உண்டு

தண்டராம்பட்டு, மே 8: மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 950 மில்லியன் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாகவும், நீர் ஆதாரமாகவும் விளங்கும் சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. அணை முழு கொள்ளளவு எட்டிய நிலையில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த மார்ச் மாதம் தென்பெண்ணை ஆற்றில் வலது மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக வினாடிக்கு 570 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டத்தில் 19 அடி குறைந்தது.
இந்நிலையில், சாத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, வினாடிக்கு 950 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 100.45 அடியாக உள்ளது. மேலும், நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், விடுமுறை தினமாக இருந்தும் அணையை சுற்றி பார்க்க குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர்.

The post சாத்தனூர் அணைக்கு 950 மில்லியன் கனஅடி நீர்வரத்து தொடர் மழை காரணமாக படம் உண்டு appeared first on Dinakaran.

Related Stories: