கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது

 

நித்திரவிளை, மே 8: கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்பனை செய்வதாக கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கொல்லங்கோடு எஸ்.ஐ. பிரபகுமார் தலைமையில் போலீசார் சென்று விசாரித்தனர். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெட்டிக் கடையில் இருந்து 18 பாக்கெட் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் பாய் (62) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

The post கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: