மதுரை: மாவோயிஸ்ட் மணிவாசகம் இறுதிச்சடங்கில் அரசுக்கு எதிராக கோஷமிட்ட பொடா சுரேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டான். மாவோயிஸ்ட் விவேக் உள்ளிட்டோர் ஏற்கனவே கைதான நிலையில் தலைமறைவாக இருந்த பொடா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை இந்திரா நகரில் பதுங்கி இருந்த பொடா சுரேஷை சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் மடக்கி பிடித்தனர். ஒத்தங்கரையில் காவல்துறைக்கு எதிராக துப்பாக்கிசூடு நடத்தியதால் பொடா சட்டத்தில் சுரேஷ் கைது செய்யப்பட்டவர்.