கூழாங்கற்கள் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல்

விருத்தாசலம், ஜூலை 7: மண்டல பறக்கும் படை புவியியல் மற்றும் சுரங்க துறை விழுப்புரம் மண்டல உதவி இயக்குனர் ராமஜெயம் தலைமையிலான அதிகாரிகள், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், டிப்பர் லாரியில் அனுமதி இன்றி கூழாங்கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த விருத்தாசலம் அருகே உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகர் மகன் வீரசேகர்(21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூழாங்கற்கள் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: