குலசேகரம் அருகே பெண் மாயம்

 

குலசேகரம், ஜூன் 30: குலசேகரம் அருகே மண்டலாச்சிக் கோணம் பகுதியை சேர்ந்தவர் அஜின் (37). டிரைவர். இவரது மனைவி சோனியா (32). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 26ம் தேதி வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற சோனியா பின்னர் வீடு திரும்பவில்லை.

அவரை கணவர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். ஆனால் சோனியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து அஜின் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

The post குலசேகரம் அருகே பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: