திருச்சி: திருச்சி பொன்மலையில் வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிறுக்கிழமைகளில் நடக்கும். இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடக்கும். அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் வந்து பொருட்களை வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் சந்தை செயல்படவில்லை. இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் முறையாக சந்தை துவங்கி நடந்தது. குறைந்த அளவே சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் மட்டுமே போடப்பட்டது. மீன் தொட்டியில் விற்பனைக்காக வைக்கப்பட்ட வண்ண மீன்கள், முயல்கள், கிளி உள்ளிட்ட பறவைகள் என பல கடைகள் வைக்கப்பட்டிருந்தன.