குஜராத்தில் ரூ600 கோடி ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஜின்ஜூடா கிராமத்தில் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ ஹெராயின் போதைப் பொருளைக் கைப்பற்றினர். இதன் சந்தை மதிப்பு ரூ.600 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘பாகிஸ்தானை சேர்ந்த ஜாகிர் பஷீர் பலோச் என்பவர் படகு மூலம் இந்த போதைப் பொருளை அனுப்பி உள்ளார். இவற்றை குஜராத்தை சேர்ந்த முக்தார் ஹூசைன், குலாம் உமர் ஆகியோர் பெற்றுக் கொண்டு பதுக்கி வைத்திருந்தனர்’.என்றனர். …

The post குஜராத்தில் ரூ600 கோடி ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: