சிவகங்கை, மே 6: காரைக்குடியில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் மே 9 அன்று நடக்க உள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மே மாத இரண்டாம் வாரத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 9 காலை 10 மணிக்கு, காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடக்க உள்ளது. கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, மின்வாரியம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காரைக்குடியில் மே 9ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.
