காதல் திருமணம் செய்த 20 நாட்களில் ஏரியில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி: நண்பர்களிடம் விசாரண

சென்னை: சென்னை சைதாப்பேட்டை திடீர் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(22). இவர் நகை கடையில் பணியாற்றி வந்தார். பிரியா என்ற பெண்ணை காதலித்து கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில், நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியில் சென்று வருவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்கள் மணிகண்டன், ஜனார்த்தனன், அருண் அஜய் ஆகியோருடன் சேர்ந்து சோழிங்கநல்லூர் வந்தார். பின்னர் அங்கு உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய பின் பெரும்பாக்கம் பகுதிக்கு சென்றனர். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையிலும் மது அருந்தியுள்ளனர். பின்னர் 4 பேரும் பெரும்பாக்கம் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் நீச்சல்போட்டி நடத்தியுள்ளனர். அப்போது விஜயகுமாரும் நண்பர் ஒருவரும் இறங்கி தண்ணீரில் நீச்சல் அடித்துள்ளனர். அப்போது விஜயகுமார் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். ஆனால் விஜயகுமார் உடல் கிடைக்கவில்லை.  இந்நிலையில், நேற்று விஜயகுமாரின் சடலம் ஏரியில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயகுமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post காதல் திருமணம் செய்த 20 நாட்களில் ஏரியில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி: நண்பர்களிடம் விசாரண appeared first on Dinakaran.

Related Stories: