கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: காதல் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை

திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரி (என்ஐடி)  உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த வேணுகோபாலின் மகள் அவளா சவுமியாதேவி(20), கல்லூரி விடுதியில் தங்கி பிடெக் சிவில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். தடகள வீராங்கனையான சவுமியாதேவியுடன், விடுதியில் தங்கி திருவாரூரை சேர்ந்த தீட்சனா என்ற மாணவியும் படித்து வந்தார்.   நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் தீட்சனா வெளியே சென்று விட்டு இரவில் விடுதிக்கு திரும்பியபோது அறைகதவை தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் சவுமியாதேவி தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கு தீட்சனா தகவல் தெரிவித்தார்.துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், மாணவி ஐதராபாத்தில் படிக்கும்போது ஒருவரிடம் பேசி வந்ததாகவும், அவருடன் நேற்று செல்போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காதல் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: காதல் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: