கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா மயிலாப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி பெருவிழா இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு, இன்று முதல் 28ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 28ம் தேதி வரை கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதன்படி, வாகனங்கள் அனுமதிக்கப்படாத சாலைகள்:* கச்சேரி சாலையிலிருந்து – மத்தள நாராயணன் தெரு.* சித்திரகுளம் கீழ் தெருவிலிருந்து – சித்திரகுளம் வடக்கு தெரு.* நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து – கிழக்கு மாட தெரு.* ஆர்.கே.மடம் சாலையிலிருந்து – தெற்கு மாட தெரு.* புனிதமேரி சாலையிலிருந்து – ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாட வீதி நோக்கி.* டாக்டர் ரங்கா சாலையிலிருந்து – வெங்கடேச அக்ரகாரம் சாலை.* லஸ் சந்திப்பிலிருந்து –  ஆர்.கே.மடம் சாலை.போக்குவரத்து மாற்றம்:* ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் ரோடு டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி ரோடு, ராஜா அண்ணாமலைபுரம் 2வது பிரதான சாலை, தேவநாதன் தெரு, ஆர்.கே.மடம் ரோடு வழியாக மந்தைவெளி அடையலாம்.* அடையாறிலிருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி, வி.கே.அய்யர் ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, டாக்டர் ரங்காரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் ரோடு, கற்பகாம்பாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ் சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் அடையலாம்.* மயிலாப்பூர் கோயில் குளம் அருகில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.* 21ம் தேதி அதிகார நந்தி திருவிழா அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், 25ம் தேதி தேர் திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 26ம் தேதி அன்று அறுபத்து மூவர் திருவிழா அன்று 1.30 மணிமுதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.   வாகனம் நிறுத்த தடை:* 25ம் தேதி தேர் திருவிழா அன்றும், 26ம்தேதி அறுபத்து மூவர் திருவிழா அன்றும், சன்னதி தெரு, கிழக்கு மாட வீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    * கிழக்குபுறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் அருகில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.* மேற்கிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில் வெங்கடேச அக்ரகாரம் திருமயிலை பறக்கும் ரயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.* காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் பி.எஸ், சிவசாமி கலாலயா பள்ளி மற்றும் ஆர்.ஆர்.சபா அருகில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. …

The post கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா மயிலாப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: