கணவனா… மனைவி.. யாருக்கு மவுசு: குடும்பத்தை குழப்பிய தம்பதி; ஓட்டு எண்ணிக்கையில் தெரியும்

காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில் ஒரே வார்டில் கணவரும், மனைவியும் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 11வது வார்டில் 9 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரமேஷ் போட்டியிடுகிறார். தவிர அதிமுக உள்ளிட்ட கட்சியினர், சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சை வேட்பாளர்களாக மெய்யர் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஒரே வார்டில் கணவரும், மனைவியும் போட்டியிடுவதால் யாருக்கு ஓட்டு போடுவது என அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் குழம்பி போயுள்ளனர். தேர்தல் முடிவுக்கு பிறகே இவர்களது ஓட்டு யாருக்கு அதிகம் விழுந்தது என்பது தெரியவரும்….

The post கணவனா… மனைவி.. யாருக்கு மவுசு: குடும்பத்தை குழப்பிய தம்பதி; ஓட்டு எண்ணிக்கையில் தெரியும் appeared first on Dinakaran.

Related Stories: