கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டனர்

சென்னை: தமிழகத்தில் 10 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும்  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு இன்று குறை கூற  ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த அருகதையும் இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன்  கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஆட்சி அமைந்த 20 நாட்களில், கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்த சூழ்நிலையிலும், கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், 01.01.2020 முதல் 30.04.2020 வரை ஓய்வு பெற்ற அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலன் கருதி, பல்வேறு பண பலன்களாக ரூ.497.32 கோடியினை கருணை உள்ளத்தோடு வழங்கியவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.தற்போது திமுக ஆட்சியில், அரசு போக்குவரத்து கழகங்களின் எந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல், அவரவர் வழித்தடத்தில் அமைதியாக பணியாற்றி வருகின்றனர்.  உடல் நலம் குன்றியவர்கள் முறையான மருத்துவ சான்றுகளின் பேரில் இலகு பணிகளில் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.  உடல் நலம் குன்றியோர் யாரையும் பணி மாறுதல் செய்து துன்புறுத்தவில்லை.  தொழிலாளார்களை, தொழிலாளர்களாக பாவிக்காத அரசு என்பதற்கு கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளே சாட்சி.*  20 சதவீத தீபாவளி போனஸ் கடந்த 1996-2001 கலைஞர் ஆட்சிக் காலத்தில் வழங்கியதை மறுத்து, வெறும் 10 சதவீதம்  மட்டுமே வழங்கி துன்புறுத்தியது.*  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முறையாக நடத்தப்பட வேண்டிய போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒபங்காக நடத்தப்படவில்லை.* பணி ஓய்வு பெற்று பல்லாண்டுகளாகியும், அவர்களுக்கு சேர வேண்டிய அனைத்து பண பலன்களும் உடனடியாக வழங்கப்படாமல், அவர்களுக்கு சொந்தமான பணத்தை பல்வேறு வகைகளில் சூறையாடியது அதிமுக ஆட்சி.* இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு சேர வேண்டிய பண பலன்கள் உடனடியாக வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது.* தரமில்லாத உதிரி பாகங்கள் கொள்முதல், தரமில்லாத கேண்டீன் உணவு வழங்கியது, விளம்பரங்கள் மூலம் தவறான முறையில் கொள்ளை அடித்தது அதிமுக ஆட்சி.திமுக அரசின் இரண்டு மாதமே ஆன நல்லாட்சியில் குறைகள் கூற எவ்வித அருகதையும், தகுதியும், ஒ.பி.எஸ்.க்கு இல்லை. முதல்வராகவும், துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த ஓ.பி.எஸ்., கடந்த 10 ஆண்டுகள் போக்குவரத்து தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, இன்று யாரோ எழுதி கொடுத்தை கொடுத்து நீலி கண்ணீர் வடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.* நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஓபிஎஸ்* அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டம்…

The post கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: