கஞ்சா போதையில் தகராறு தந்தையை அடித்து கொன்ற மகன்

சென்னை: பெரியபாளையம் அருகே ஆரணி தமிழ் காலனியை சேர்ந்தவர் வேணு(52). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகளும், மணிகண்டன்(21) என்ற மகனும் உள்ளனர். வேணுவின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். வேணு 2 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார். தற்போது தந்தை, மகன் இருவரும் வீட்டில் தனியாக வசிக்கின்றனர். இவர்களுக்கு அவரது மகள் சாப்பாடு எடுத்து வந்து தருவது வழக்கம். இந்நிலையில், மணிகண்டன் குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. நேற்று தேர்தல் என்பதால் மணிகண்டன் காலையில் இருந்தே குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது போதையில் தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தந்தையின் தலையை பிடித்து சுவற்றில் மோதியுள்ளார். இதில் சுவற்றில் இருந்த கல் வேணுவின் தலையில் குத்தி மயங்கி கீழே விழுந்துள்ளார். போதை தலைக்கேறிய மகன் தந்தையின் உடல் அருகில் படுத்து தூங்கி விட்டார். பின்னர் போதை தெளிந்து எழுந்து பார்த்தபோது தந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டிற்கு வெளியே இருந்த மின்கம்பத்தில் தலையை மோதி கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தந்தை, மகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்னர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு வேணு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்த ஆரணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வேணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post கஞ்சா போதையில் தகராறு தந்தையை அடித்து கொன்ற மகன் appeared first on Dinakaran.

Related Stories: