ஓய்வூதியம் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் கூட்டத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி அடுத்த மாதம் 16ம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடத்த உள்ளார். எனவே, சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரட்டை பிரதி படிவத்தில் மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு வருகிற 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்….

The post ஓய்வூதியம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: