தமிழகம் ஒன்றேகுலம் ஒருவனேதேவன் என்பதே திமுக-வின் தாரக மந்திரம்!: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு..!! Jun 19, 2021 அமைச்சர் பொன்முடி விலாப்புபுரம் விழுப்புரம் பொன்முடி திஷ்யாகம் தேவன் திமுகா வில்லுப்பம் விழுப்புரம்: ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தாரக மந்திரமாக கொண்டு திமுக ஆட்சி செயல்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் 262 அர்ச்சகர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, ஒன்றேகுலம் ஒருவனேதேவன் என்பதே திமுக-வின் தாரக மந்திரம் என்றார். திமுக எப்போதும் யாரையும் வேறுபடுத்தி காட்டியது கிடையாது என்று கூறினார். அதேவழியில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். 32 ஆண்டு காலம் நடைபெறாமல் இருந்த திருவாரூர் தேர் திருவிழாவை விமர்சியாக நடத்தியது கலைஞர் ஆட்சி என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கோவில்களில் பட்டியலினத்தவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ததும் கலைஞர் தான் என்று பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார். … The post ஒன்றேகுலம் ஒருவனேதேவன் என்பதே திமுக-வின் தாரக மந்திரம்!: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு..!! appeared first on Dinakaran.
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது.! மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி
பூவிருந்தவல்லி அருகே உள்ள கண்ணார்பாளையம் ஏரியில் கொட்டப்படும் காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளால் சுகாதார சீர்கேடு
தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம்
கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு
அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டம்