இந்தியா ஒடிசாவில் கிளை சிறையில் 70 கைதி, 5 சிறைத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!! Jun 08, 2021 ஒடிசா தின மலர் ராய்கடா: ஒடிசா மாநிலத்தில் உள்ள கிளை சிறை ஒன்றில் 70 கைதிகளுக்கும், 5 சிறைத்துறை பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 அலை தற்போது குறைய தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் 63 நாட்களுக்கு பிறகு 1 லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு சென்றுள்ளது. இந்நிலையில் சிறைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராய்கடா மாவட்டத்தில் உள்ள குரும்பூர் என்ற நகரத்தில் கிளை சிறைச்சாலை ஒன்று உள்ளது. சிறு குற்றங்களில் ஈடுபட்டு விசாரணை கைதிகள் 113 பேர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 70 கைதிகளுக்கும், 5 சிறைத்துறை ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு இலக்கான கைதிகள் அனைவரையும் தனிமைப்படுத்திய சிறை அதிகாரிகள் தொற்று இல்லாத 43 கைதிகளை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 பேரும் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறையில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் உடன் இருந்த கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. … The post ஒடிசாவில் கிளை சிறையில் 70 கைதி, 5 சிறைத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!! appeared first on Dinakaran.
டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் அச்சிட்டு தருவதை நிறுத்த முடிவு: டிஜிட்டல் வடிவில் வழங்க கேரளா அரசு திட்டம்
ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.1.17லட்சம் கோடியை எப்படி செலவழித்தீர்கள்? அறிக்கை கேட்டு முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் கடிதம்
யாருமே வெல்ல முடியாதவர் அல்ல ஆணவத்தை மட்டும் மக்களால் சகித்துக்கொள்ள முடியாது: மக்களவை தேர்தல் முடிவு குறித்து வாய்திறந்தார் பிரசாந்த் கிஷோர்
இறுதி கட்டமாக 40 ெதாகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு; ஜம்மு – காஷ்மீரில் இன்றுடன் தேர்தல் நிறைவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை; ஆட்சியை பிடிப்பது யார்?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: நாளை மறுதினம் விஸ்வக்சேனாதிபதி வீதி உலா
திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது பற்றி பாஜக எம்.எல்.ஏ தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரிக்கப்படும்: டி.கே சிவகுமார்
அதானி துறைமுகத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ராகுல் காந்தி கேள்வி