உளுந்தூர்பேட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து ₹1 லட்சம் கொள்ளை

உளுந்தூர்பேட்டை, நவ. 8: உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமையான தடிகாரன் கோயில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கோயில் வளாகத்தில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் சூலாயுதம் கொண்டு உடைத்து ரூபாய் ஒரு லட்சத்துக்கு மேல் இருந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்று காலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் கொள்ளை நடந்த கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து ₹1 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: