இலுப்பூரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை

 

விராலிமலை, ஜூலை 6: இலுப்பூரில் பலத்த காற்றுடன் நேற்று மாலை பெய்த கனமழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் நகர் பகுதி முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.47 மில்லி மீட்டராக பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சின்ன கடைவீதி, பேருந்து நிலையம்,சவுராஸ்ட்ரா தெரு, மேட்டுபட்டி, மேட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது.

இதையடுத்து மதியம் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது அதை தொடர்ந்து சற்று நேரத்தில் தூரல் மழையாக தொடங்கிய மழை தொடர்ந்து பலத்த காற்றுடன் கன மழையாக மாறி சிறிய, பெரிய மழை என சுமார் ஒரு மணி நேரம் பெய்தது.தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு மீண்டும் மழை தொடங்கி சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

The post இலுப்பூரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை appeared first on Dinakaran.

Related Stories: