இன்வெட்டரை பழுது நீக்கியபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஆவடி: அம்பத்தூர் சண்முகபுரம் இந்திராகாந்திநகர் நேரு தெருவில் வசித்து வந்தவர் ரவி (54). இவர், சென்னை முகப்பேரில் சாவி தயாரிக்கும் கடைநடத்தினார். நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள இன்வெட்டர் பழுதாகிவிட்டதால் அவற்றை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதில் இருந்து ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்ட ரவி மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ரவி வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்….

The post இன்வெட்டரை பழுது நீக்கியபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: