இந்தியா ‘இந்திய மக்களை புறக்கணித்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யவில்லை’!: சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம்..!! May 19, 2021 சீரம் இந்தியா அதிகாரி தில்லி டெல்லி: இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று சீரம் இந்தியா நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலை தீவிரமாகியுள்ளது. இதனால் நாட்டின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் முன்னுரிமை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்தியா நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா, கடந்த ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் கொண்டதன் அடிப்படையில், சில நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக கருதக்கூடாது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கையானது ஓரிரு மாதங்களில் முடியும் செயல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். … The post ‘இந்திய மக்களை புறக்கணித்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யவில்லை’!: சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம்..!! appeared first on Dinakaran.
3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
தமிழ் வாக்காளர்கள் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
விவசாயிகள் போராட்டத்தை இழிவாக பேசிய கங்கனா ரனாவத்தை அறைந்த காவலருக்கு மோதிரம் பரிசு: தபெதிக அறிவிப்பு
மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்பு; 30 பேருக்கு அமைச்சர் பதவி: உத்தேச பட்டியல் வெளியானதால் பரபரப்பு
தேர்தல் ரிசல்ட் தினத்தில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு; பங்குச்சந்தை முறைகேடு விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு
பவன்கல்யாணுக்கு சீட் விட்டுக்கொடுத்த தெலுங்குதேசம் மாஜி எம்எல்ஏவிடம் ரகளை, கார் மீது தாக்குதல்: ஜனசேனா கட்சி மீது குற்றச்சாட்டு
பா.ஜ ஆட்சி அமைப்பதை தடுக்க நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசை காட்டப்பட்டதா?.. ஐக்கிய ஜனதா தளம் தலைவரின் குற்றச்சாட்டால் பரபரப்பு