திருவெற்றியூரில் 4 வயது பெண் குழந்தை கடத்தல்: இளைஞர் கைது

சென்னை: திருவெற்றியூரில் 4 வயது பெண் குழந்தையை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த  இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொது மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.  தங்கள் பகுதியில் வீடு அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி திடீரென்று மாயமானார். இதனையடுத்து பொது மக்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடினர். அப்போது திருச்சினாகுப்பம் கடற்கரைப் பகுதியில் 24 வயது அருண் குழந்தையுடன் பதுங்கியது தெரியவந்தது.

இதனையடுத்து குழந்தையை  மீட்டு இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். செங்கல்பட்டைச் சேர்ந்த அருண் குடிபோதையில் கடற்கரை பகுதிக்கு குழந்தையை தூக்கிச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு முயற்சித்தது தெரியவந்தது. அருண் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார் அவனை புழல் சிறையில் அடைத்தனர்

Related Stories: