சென்னை: திருவெற்றியூரில் 4 வயது பெண் குழந்தையை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து பொது மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். தங்கள் பகுதியில் வீடு அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி திடீரென்று மாயமானார். இதனையடுத்து பொது மக்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடினர். அப்போது திருச்சினாகுப்பம் கடற்கரைப் பகுதியில் 24 வயது அருண் குழந்தையுடன் பதுங்கியது தெரியவந்தது.