திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடிபட்டத்தினையொட்டி விதை புபணிக்காக விவசாயிகள் தங்களது வயல்களை உழவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான சாத்தங்குடி, கரடிக்கல், உரப்பனூர், சித்தாலை, சுங்குராம்பட்டி, கீழக்கோட்டை, நடுக்கோட்டை, கரிசல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆடிப்பட்டத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆடிமாதம் பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தங்களது வயல்களை மாடுகள் மற்றும் டிராக்டர் கொண்டு உழுது வருகின்றனர். ஆடிபட்டத்தில் மழை பெய்து இந்தாண்டு விவசாயம் பெருகும் என்ற நம்பிக்கையில் பணிகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். விவசாயி கந்தசாமி கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் ஆடிபட்டத்திற்கான விதைகளை வாங்கி ஆடி 1 மற்றும் 18ம் தேதி விதைப்பது வழக்கம். இந்தாண்டு வரும் 17ம் தேதி ஆடிபிறப்பதால் மழையை எதிர்பார்த்து இப்போதே உழவு பணிகளை செய்து வருகிறோம்’’ என்றார்.