ஆட்டோவில் சென்றவரிடம் செல்போன் பறிப்பு: பைக் ஆசாமிகள் ஓட்டம்

புழல்:பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமித்குமார் (29). இவர், சென்னை புழல், வனிதா நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் அமித்குமார் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றிருந்தார். நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அமித்குமார் ரயிலில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து புழல் பகுதிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். கதிர்வேடு சிக்னலில் ஆட்டோ நின்றபோது, அமித்குமார் கையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர். புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் செல்போன் பறித்த 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்….

The post ஆட்டோவில் சென்றவரிடம் செல்போன் பறிப்பு: பைக் ஆசாமிகள் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: