அருமனை பகுதியில் குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல்

அருமனை, ஜூலை 5: அருமனை அருகே நாரத்தன் குழி, பனிச்சமூடு ஆகிய பகுதிகளில் சோதனை நடத்திய போலீசார் குட்கா விற்ற கடைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக மான்கோடு பகுதியில் உள்ள ஜெயக்குமார் (56), காரோடு நெல்லிவிளை பகுதியில் உள்ள ராஜு (53) ஆகியோரது கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கிளாஸ்டின், போலீசாரின் உதவியுடன் பூட்டி சீல் வைத்து அதற்கான நோட்டீசை கடையின் உரிமையாளர்களிடம் வழங்கினார். 15 நாட்களுக்குப் பிறகு ₹25 ஆயிரம் அபராத தொகையை கட்டிய பிறகு காவல் நிலையத்தில் அனுமதி பெற்று கடை திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அருமனை பகுதியில் குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: