அனுமதியின்றி இயக்கிய 2 லாரிகள், பொக்லைன் பறிமுதல்

பாலக்கோடு, ஆக.30: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், முறையாக சாலை வரி செலுத்தாத, உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி தலைமையில், சோமனஅள்ளி நெடுஞ்சாலை முதல் காடுசெட்டிப்பட்டி வரை வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, கர்த்தாரப்பட்டி சுங்கச்சாவடி அருகே ஆய்வு செய்ததில், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பொக்லைன்களை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களக்கு ₹60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தகுதி சான்று பெறாமலும், அனுமதி இன்றியும் இயக்கிய 2 சரக்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு தலா ₹20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post அனுமதியின்றி இயக்கிய 2 லாரிகள், பொக்லைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: