×

காய்க்கும் மரம்தான் கல்லடிபடும்: எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் பதிலடி

கோபி: ‘காய்க்கும் மரம்தான் கல்லடிபடும்’’ என எடப்பாடி விமர்சனத்துக்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

ரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளரும் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: இத்தேர்தலில் தவெகவுக்கும்-திமுகவுக்கும் தான் போட்டியே தவிர வேற ஒருவருக்கும் இல்லை.

நேற்று முன்தினம் கூட இங்கு எடப்பாடி உள்பட சிலர் என்னை விமர்சனம் செய்து பேசினர். யார் எதை சொன்னாலும் மக்கள்தான் எனக்கு முக்கியம். மற்றவர்கள் விமர்சனம் செய்வதை பற்றி நான் கவலைப்படவில்லை.

எது எப்படி வந்தாலும் சரி, எப்படிப்பட்ட சொற்களை வைத்து வசை பாடினாலும் சரி, காய்க்கும் மரம்தான் கல்லடிபடும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Sengkottaian ,Edapadi Palanisami ,Kobe ,Eadapadi ,K.K. ,Teka ,Road District Gobi Assembly Constituency ,A. Sengkottaian ,
× RELATED காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!