கடலூர்:கடலூரில் இன்று பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவருடைய ஆதரவாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை நான் வைக்கிறேன். விஜய்யால் ஓரளவுக்கு வாக்குகள் பெறமுடியுமே தவிர வெற்றி பெற முடியாது. அதனால் விஜய்யின் ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களிக்காதீர்கள். எங்களுக்கு வாக்களியுங்கள். உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் எங்களுக்கு போடுங்கள். இதை விஜய் ரசிகர்கள் செய்ய மாட்டார்கள். அவரது ஆதரவாளர்களாவது செய்ய வேண்டும் என்றார்.
