முல்லைப்பெரியாறு கால்வாயில் உடைப்பு!!! குடிநீரில் மழைநீர் கலக்கும் அபாயம்…

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் தேக்கடி தலைமதகு பகுதி கால்வாயின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுகளுடன் கலந்த மழைநீர் குடிநீரில் கலந்து வருகிறது.

ஓடையில் அடித்துவரப்பட்ட குப்பைகள் தேங்கியதால் நீரோட்டம் தடைபட்டு இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மழை குறைந்த பிறகு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: