பீகார் மாநிலம் பாட்னாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸ் தடியடி

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பாட்னாவில் ஊர்வலமாக சென்ற மாணவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களை போலீசார் ஓட ஓட விரட்டி தாக்கினர். தடியடி நடத்தப்பட்டதை தொடர்ந்து போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பாட்னா மட்டுமின்றி சாப்ரா, அவுரங்காபாத் மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

Related Stories: