சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் மற்றும் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் சம்பவத்தில் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தனியார் கல்லூரி மாணவர் மீது கல் பட்டு காயமடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
