நடத்தை சந்தேகத்தில் மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி அடுத்த ஜேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தாபா ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரமேஷ், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மாலை மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், மனைவியை கடப்பாரையால் அடித்துக்கொலை செய்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் ருக்கம்மாள், அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து மகாராஜகடை போலீசிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், கொலையான ராஜேஸ்வரியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதே பகுதியில் பதுங்கியிருந்த ரமேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Related Stories: