சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை அதிமுகவில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். புதிய மாவட்ட செயலாளர் பசுபதி-சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆனந்தி, வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ், பாஸ்கரன், எழில்ராஜ், நடராஜன், விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்து நீக்கினார்.
