இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!..

நொட்டிங்காம்: இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 11.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Related Stories: