திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே 14 சிறுமி கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வளாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் முகம்மது (46). இவர் அங்குள்ள ஒரு அரபி பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் முகம்மது அங்கு படிக்க வரும் மாணவிகளை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் வளாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் அவர் 14 சிறுமிகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதற்கிடையே முகம்மது தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் முகம்மது பீகாரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
