சென்னை: திருவள்ளூர் ஆலையில் அமோனியா கசிவு பாதிப்பால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, ஒடிசாவை சேர்ந்த பராத்தி ஜூவாங்கா (20) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாயு கசிவு காரணமாக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள விசாரணைக் குழு இறால் பதப்படுத்தும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
