சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவுக்கான புகார் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இனி தலைமைச் செயலகத்துக்குள் சென்று முதல்வர் தனிப்பிரிவில் மக்கள் புகார் மனு அளிக்கலாம். கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து புகார் பெட்டி அகற்றப்பட்டது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற மாற்றம் திரும்பப் பெறப்பட்டு மீண்டும் பழைய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
